திருவாரூர்–சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகட்டுரை போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு.
திருவாரூர் பிப்.23
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களுக்காக கட்டுரை போட்டி ஓவிய போட்டி பேச்சுப்போட்டி போன்றவற்றை நடத்தி வருகின்றனர் இந்நிகழ்வில் திருவாரூர் ஒன்றியம் கடாரம் கொண்டான் ஸ்ரீ தியாகராஜா அரசு உதவி பெறும்நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது பரிசளிப்பு நிகழ்வில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) . பிரபு அவர்கள் தலைமை வகித்தார் .ஆசிரியர்கள் கண்ணன், கிருஷ்ணகுமார், ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் அன்புச் செல்வன் வரவேற்றார். மாணவர் தலைவன் சா பிரதீஸ் நன்றி உரையாற்றினார். நிகழ்வில் பள்ளியின் மாணவர்கள் சுற்றுச்சூழல் மேம்பட நெகிழி பயன்பாட்டை குறைப்போம் என்றும் மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்றும் எனும் உறுதி மொழி ஏற்று தங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் நெகிழி பயன்பாட்டை குறைத்திட விழிப்புணர்வு செய்தனர். மாணவர்களை ஊக்கப்படுத்திய நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தினருக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.