திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் செங்குன்றம் பி எஸ் ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ் ராஜா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஜே ரஜினி அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய துணை தலைவர் ஆர் முருகக்கனி தேசிய தொழில்நுட்ப இயக்குனர் எஸ் துரை ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பில் தேசிய போட்டிக்கு வெளி மாநிலம் என்றால் கலந்து கொள்வது என்றும் தமிழகத்தில் நடத்துவதாக இருந்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்துவதற்கு கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில போட்டியில் தங்கப்பதக்கம் அதிக அளவில் திருவள்ளூர் மாவட்டம் பெற்றதற்காக மாணவ மாணவிகளையும். பயிற்சியாளர்களையும் . மாவட்ட நிர்வாகிகளையும் கூட்டம் பாராட்டியது.முடிவில் மாவட்ட பொருளாளர்.
எம்.பாஸ்கர் நன்றி கூறினார் .