திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் புழல் ஏரியில் திடீர் ஆய்வு.
சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கிய ஏரியான புழல் ஏரியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.பருவமழை துவங்கி பல இடங்களில் மழை பெய்து வருவதால் ஏரிகள்,நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதன்காரணமாக மழைநீர் நீர்நிலைகளில் தேங்கி கால்வாய்களின் மூலம் குடியிருப்புகள் மற்றும் தெருக்களில் சூழ்ந்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பாதுகாக்க அரசின் அறிவுரைப்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று காலை (செங்குன்றம்)புழல் ஏரியை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் துணை ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன்,மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொன்னேரி தாசில்தார். மதிவாணன். வருவாய் அலுவலர் கீதா, நாரவாரிகுப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் , விப்ரநாராயனண், புழல் ஒன்றிய திமுக செயலாளர். சரவணன் மற்றும் அலுவலர்கள் ஸ்வாட் தன்னார்வ தொண்டு நிர்வாகிகள் உடனிருந்தனர்.