fbpx
Others

திருவள்ளூர் மாவட்டம்….சம்பந்தப்பட்ட துறை கவனிக்குமா…..?

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி பகுதியில் சோழவரம் ஏரிக்கும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கும் இடையில் லிங்க் கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் கரை பகுதியில் ஊராட்சி ஊழியர்கள் குப்பை கழிவுகளை கொட்டி எரித்து வருகின்றனர்.இதனால் விஜயநல்லூர் மற்றும் மருதுபாண்டி நகர் பகுதியில் இருந்து கரையோர சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.அதே வேளையில் சென்னைக்கு குடிநீர் வழங்குகின்ற புழல் எரியின் லிங்க் கால்வாயில் இந்த குப்பை கழிவுகள் வீசப்படுவதால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது.எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு லிங்க் கால்வாய் கரையோரம் குப்பைகளை கொட்டாமலும் அதனை எரிக்காமலும் பொதுமக்கள் செல்லுகின்ற சாலையில் சுகாதார சீர்கேட்டை உருவாக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close