Others
திருவள்ளூர் மாவட்டம்- – -ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…?
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகம் 2001-2002 ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் மிகவும் பாழடைந்து இருக்கிறது. மழை பெய்தால் அந்த கட்டிடம் முழுவதும் மழைநீர் தேங்கி அந்த அறையில் இருக்கின்ற முக்கியமான தஸ்தாவேஜ்கள் எல்லாம் நனைந்து பாழாகிவரும் சூழ்நிலை உள்ளது.
இது குறித்து புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டு இருக்கிறது.
விரைவிலே புதிய கட்டிடம் கட்டி கிராம நிர்வாக அலுவலகம் வருகின்ற பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அங்கு இருக்கின்ற முக்கியமான தஸ்தாவேஜ்கள் எல்லாம் பாழாகாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
.