fbpx
Others

திருவள்ளூர்–பருப்பு விலை ஏற்றத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க, உணவுப் பொருள் பதுக்கலை தடுப்பதற்காகவும் பருப்பு விலை ஏற்றத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் உணவு பொருள் சேமிப்பு கிடங்குகளை‌ இன்று (05.05.2023) உணவுத்துறை செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் உணவுப்பொருள் வழங்கல் துறை துணை ஆணையர் திரு.எம்.மதியழகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.ஜெ.சேகர், வட்ட வழங்கல் அலுவலர் திரு.கே.ஜே.ஜெய்கர் பிரபு, உணவு கிடங்கு மேலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close