திருவள்ளூர்-சோழவரம்–அரிசி ஆலையில் பதுக்கிய 50 டன் ரேஷன் அரிசி
.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் வருவாய் துறையினர் ஆங்காடு கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர். அங்குள்ள ராஜாமணி அரிசி ஆலையில் சோதனை நடத்திய போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பாலிஷ் செய்து வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக தெரிந்தது.இதனைத் தொடர்ந்து அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 50 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, சரக்கு வாகனம், கார் என 3வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அரிசி ஆலையில் பணியாற்றிய வட மாநில தொழிலாளர்கள் ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.