fbpx
Others

திருவள்ளூர்- ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து….?

. திருவள்ளூர் அருகே ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து, 3,500 லிட்டர் பால் சாலையோர பள்ளத்தில் ஆறாக ஓடி வீணானது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து, சுமார் 7 ஆயிரம் லிட்டர் பாலுடன் ஆவின் டேங்கர் லாரி ஒன்று, நேற்று அதிகாலை திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஆவின் பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தது.திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் இருக்க, டேங்கர் லாரி ஓட்டுநர் லட்சுமணன் லாரியை சாலையோரமாக இயக்கினார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரத்தில் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.இதனால், டேங்கர் லாரியிலிருந்து, 3,500 லிட்டர் பால் கொட்டி, சாலையோர பள்ளத்தில் ஆறாக ஓடிவீணானது. இதுகுறித்து, தகவலறிந்த காக்களூர் ஆவின் பால் பண்ணை அதிகாரிகள், திருவள்ளூர் தாலுகா போலீஸார், சம்பவ இடம் விரைந்து, ஆவின் பால் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close