Others
திருவள்ளூர்-அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு.
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து தனிநபர் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வந்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் ஆக்கிரமிப்பு நிலம் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது