fbpx
Others

திருப்பூர்–நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர கூட்டம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா குலாலர் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர கூட்டம் இன்று கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா கௌதமன், நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் கதிர்வேலன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் பாலமுத்துக்குமார் வழிகாட்டுதல் படியும் இன்று நடைபெற்றது கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து மத்திய அரசின் சாதனை விளக்கி கூறி அதிக வாக்கு சேகரிப்பது எனவும் மேலும் மத்திய அரசின் பயனாளிகளை சந்தித்து அவர்களது வாக்குகளை பெறவும் தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சார்ந்த வாக்குகளை பெறவும் அறிவுறுத்தப்பட்டது மேலும் வரும் ஜனவரி மாதம் நீலகிரி பாராளுமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து பூத் கமிட்டிகளின் பொறுப்பாளர்களின் கூட்டமும் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவண பெருமாள், சுபாஷ் மாவட்டத் துணைத் தலைவர்கள் சண்முகம், சண்முகசுந்தரம் மற்றும் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close