fbpx
Others

திருப்பூர்–அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாவேஷகம்-சிறப்புசெய்தி

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாவேஷகம் கடல் போல் காட்சியளித்த மக்கள் வெள்ளம் : திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்காவிற்குட்பட்ட பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது . இதில் லட்சக்கணக்கான மக்கள் அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபட அலை கடலென திரண்டு வந்தனர். கொங்கு மண்டலத்தில் சிவாலயங்களில் முதன்மையாக கொண்டது அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பாடல் பாடி முதலை விழுங்கிய சிறுவனை உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்க தலம் ஆகும் . இந்த திருத்தலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் ஸ்ரீ கருணாம்பிகை திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பின்பு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட உபயோதாரர்கள் நன்கொடையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் பிரம்மாண்டமாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நிறைவு செய்யப்பட்ட இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 28 ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு அனுமதி பெறுதல் மற்றும் ஆணை முகத்தோன் வேள்வியுடன் துவங்கியது. கைலாயம் போல் காட்சியளிக்கும் பிரம்மாண்டமாக யாகசாலையில் 79 குண்டங்கள் அமைக்கப்பட்டு 100 சிவாச்சாரியார்கள் கொண்டு ஜனவரி 29ஆம் தேதி துவங்கிய முதல் கால வேள்வி பூஜை அடுத்த நாட்களில் இரண்டு முதல் ஏழு வரை நாள் ஒன்றுக்கு இரண்டு கால வேள்வி பூஜை என நேற்று இரவு வரை ஏழு கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் கோவிலில் தங்கம் மூலாம் பூசிய சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக செய்யப்பட்ட நிறுவப்பட்ட கொடிமரம் கனகசபை போல தண்டாயுதபாணி 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பவேஷம் நடைபெற்றது. இதை எடுத்து விழாவின் முக்கிய நாளான இன்று அவிநாசிநாதருக்கு அதிகாலை 6 மணிக்கு துவங்கிய எட்டாம் கால பூஜை 8 மணி வரை நடைபெற்றது. இந்த எட்டாம் கால பூஜை வரை நூறு சிவாச்சாரியார்கள் தொடர்ந்து வேள்வி பூஜையில் வைக்கப்பட்டுள்ள திருக்குடங்களை சிவாச்சியாரியார்கள் இறைவனின் அருளோடு சுமந்து திருக்கோவில் வளாகத்திற்கு உலா வந்தனர். சரியாக இன்று காலை 9 .17 மணியளவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரங்கள் ஐந்து நிலை கொண்ட அம்மன் கோபுரம் மூலவர்களான அவிநாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் பெருமான் சன்னதி ஆகிய ஐந்து கோபுர கலசங்களுக்கு சிவாச்சியார்கள் ஒருசேர திருக்குடங்களில் கொண்டு வந்து புனித தீர்த்தத்தால் பல்லாயிரம் பக்தர்களின் விண்ணைத் தொடும் நமசிவாய கோஷங்கள் மத்தியில் குடமுழுக்கு கும்பவேஷம் செய்தனர். அதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் இறைவனை வழிபட்டனர் ஹெலிகாப்டர் மூலமாக ராஜகோபுரங்களுக்கு மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டது. கோயிலை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தன்னார்வல்கள் பங்களிப்பில் பக்தர்களுக்கு பெரிய ட்ரோன் மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு திருமண மண்டபங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தனர். அவினாசி பேரூராட்சி சார்பாக தன்னார்வலர்களின் பங்களிப்புடன் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும் நிறைவாக இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close