fbpx
Others

திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல– செய்தி

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் சண்டை போடுவது போல நடிக்கிறார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது இதில்முதல்- அமைச்சர்மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டார். கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மு.பெ.சாமிநாதன், முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நாற்பதும் நமதே, நாடும் நமதே வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு நீங்கள்தான் பொறுப்பாளர் என்பதை மறந்துவிடாதீர்கள். ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அது உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கை காரணமாகத்தான்.  தினமும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள்? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்களால் ஒதுக்க முடியுமா? ஒதுக்குவீர்களா? அந்த ஒரு மணி நேரத்தை ‘பூத்’ வேலைக்காக ஒதுக்குங்கள். அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுவதும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். யாருக்கு என்ன தேவையோ அதை தெரிந்துகொண்டு ஏற்பாடு செய்து கொடுங்கள். வாக்குறுதி ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்கு சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று பேசியிருப்பீர்கள். சில வீடுகளில் மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். சில வீடுகளில் அதை எதிர்பார்க்க முடியாது. அதற்காக நாம் விட்டுவிடக்கூடாது. மீண்டும் அடுத்த மாதம் புன்னகை மாறாமல் அவர்களைத் தேடிச் செல்லுங்கள். என்னைப் பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்திக்கொண்டு வருகிறோம். Also Read – தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் ஆனால், மத்தியில் ஒரு ஆட்சி இருக்கிறது. அதுவும் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. 3-வது முறை வரப்போவதில்லை. வரக்கூடாது. அதுதான் முக்கியம். பத்து ஆண்டு ஆகப்போகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சொன்னதற்கு மாறாக, ‘ரிவர்ஸ் கியரில்’ போய்க்கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியிடம் அவருடைய ஆட்சியின் சாதனை என்று சொல்லிக்கொள்வதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து கணக்கு காட்டப்பார்க்கிறார். இதையாவது சொல்லி வாக்கு கேக்கலாம் என்று நினைக்கிறார். அ.தி.மு.க.-பா.ஜ.க. சண்டை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க, தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்க கூட தகுதியில்லாத கட்சி என்று நம்மை விட அவர்களுக்கே நன்றாக தெரியும். அதனால்தான் அ.தி.மு.க.வை பயமுறுத்தி அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். உள்ளே நட்பாக இருக்கிறார்கள். எதற்காக இந்த நடிப்பு? அ.தி.மு.க.வை ஆதரித்தால், அவர்களின் ஊழல்களுக்கு பா.ஜ.க.வும் பொறுப்பேற்க வேண்டி வரும். பா.ஜ.க.வை ஆதரித்தால், பா.ஜ.க.வின் மதவாதத்திற்கு அ.தி.மு.க.வும் துணைபோக வேண்டி வரும். அதனால் நடிக்கிறார்கள். இங்கு இவ்வளவு சண்டை நடந்தபோது, உள்துறை மந்திரி அமித்ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே… என்ன காரணம்? ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வருகிறது, காப்பாற்றுங்கள் என்று கேட்க சென்றாரா? கோடநாடு வழக்கில் இருந்து நழுவிட சென்றாரா? எதற்காக இந்த சந்திப்பு?. மத்திய பா.ஜ.க. அரசு மூலமாக, தமிழ்நாட்டுக்கு அ.தி.மு.க கொண்டு வந்த நன்மை என்ன? எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் பாசிச திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் அ.தி.மு.க.வுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் படுதோல்வியை பரிசாகத்தர வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கடமை இதுவரை மக்களை ஏமாற்றிய பா.ஜ.க., அ.தி.மு.க. இந்த தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட இருக்கிறது. மக்களின் இந்த கோபத்தை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டிய கடமை வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான உங்களுக்கு இருக்கிறது. கட்சிக்காக உழையுங்கள். மக்களுக்காக உழையுங்கள். அதற்கான உரிய பலன் உங்களைத் தேடி வரும். இயக்கத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர்களை கட்சி எப்போதும் கைவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close