Others
திருநெல்வேலி-பெருமழையிலும் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு..,
பெருமழையிலும் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு!
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, முதுமொத்தன்மொழி ஊராட்சி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு உள்ளது.இந்தக் கிணறுக்குள் எவ்வளவு வெள்ளத்தை திருப்பி விட்டாலும் கிணறு நிரம்புவதே இல்லை.2022ல் பெருமழை பெய்து உருவான வெள்ளம் கிணறுக்குள் பாய்ச்சப்பட்டபோதும் கிணறு நிரம்பவில்லை.ஐ.ஐ.டி., பேராசிரியர்களின் ஆய்வில், சுண்ணாம்புப் பாறைகளால் உருவான பகுதி என்பது தெரிய வந்தது.சுண்ணாம்பு பாறையில் துளைகள் பெரிதாகி, 50 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்வழிப்பாதை உருவாகியிருப்பதால், கிணறு நிறைவதில்லை என கண்டறியப்பட்டது.தற்போது நான்குமாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்துவரும்நிலையிலும்,இந்தஅதிசயக்கிணறுநிரம்பவில்லை.பல ஆயிரம் கன அடி வெள்ள நீரை உள்வாங்கிக் கொண்டே இருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.