fbpx
Others

திருநின்றவூர்—மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

ஆவடி சேப்பா அகடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி திருநின்றவூர் கிரேஸ் பார்க் பப்ளிக் பள்ளியில் நடந்தது போட்டியை தேசிய சிலம்ப துணை தலைவர் ஆர். முருகக்கனி மற்றும் துணை செயலாளர் எம்.ராஜா தொடங்கி வைத்தனர்.நடராஜன் ஆசிரியர். சிலம்ப ஆசான் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.அரசு கலை பண்பாடு துறை சார்பில் சிலம்ப கலை முதுமணி பட்டம் பெற்ற ஆர் முருககனி ஆசானுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் உஷாராணி ரவி. துணைத் தலைவர் சரளா நாகராஜ். கவுன்சிலர்கள் ரவி. அன்பழகன். பள்ளி தாளாளர் பால் உமேஷ். தலைமை ஆசிரியர் கீதா உமேஷ். துணை தலைமை ஆசிரியர். நிகிதா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அகாடமி நிர்வாகிகள் எஸ் .ராஜா என். சங்கீதா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர். கார்த்திக் செய்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close