Others
திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்தியப் பிரியா பொறுப்பேற்பு
- திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்தியப் பிரியா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையா் ஆவாா். திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்தியப் பிரியா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையா் ஆவாா்.தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில் பலருக்கு பதவி உயா்வுடன் கூடிய பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.) இருந்த சந்தோஷ்குமாா் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த ஜி. காா்த்திகேயன் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.) நியமிக்கப்பட்டுள்ளாா். காஞ்சிபுரத்தில் துணைத் தலைவராக பணியாற்றிய எம்.சத்தியப்பிரியா திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கெனவே திருச்சி மாநகர துணை ஆணையராக சிறிது காலம் பணியாற்றியவா் ஆவாா். அதேபோல, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமாா் திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக இருந்த அதிவீரபாண்டியன் சென்னை தாம்பரம் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்