fbpx
Others

திமுக – அதிமுக காரசார விவாதம்..! ஆவேசமான இபிஎஸ்…?

சட்டமன்றம்

  • பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, இந்த ஆண்டு விலையில்லா வேட்டி – சேலை வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.ஆனால், இந்த கேள்வியை அதிமுகவினர் தவிர, வேறு யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அமைச்சர் காந்தி விமர்சித்தார். 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து யாராவது பேச முடியுமா என்றும் வினவினார்.இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேட்டி, சேலை வழங்கி முடிக்கப்படும் என அமைச்சர் கூறியதாகவும், அதை கேட்கும் போது பதில் சொல்ல முடியாது என்றால், எதற்காக இலாகா வைத்துள்ளீர்கள்என்றும்காட்டமாக பேசினார்.  அப்போது குறுக்கிட்டு பேசிய அவைத்தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு உரிய பதிலை அமைச்சர் வழங்கினால் போதுமானது என்றார். பின்னர் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக ஆட்சியிலும் வேட்டி, சேலை தாமதமாக வழங்கப்பட்டதையே அமைச்சர் காந்தி பதிலாக சொன்னதாகவும், வேறு எதுவும் தவறாக பேசவில்லை என்றும் கூறினார்.இதனால், ஆவேசமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்னையை பேசத்தான் பேரவைக்கு வந்துள்ளதாகவும், வேலை, வெட்டி இல்லாமல் வெட்டியாகவா அமர்ந்துள்ளோம் என்றும் காட்டமாக பேசினார். மக்கள் பிரச்னையை அதிமுகவினர் பேசாவிட்டால் வேறு யார் பேசுவது என்றும் வினவினார்.  அதைத்தொடர்ந்து, அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து, உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்வார் என்றும் வேறு யாரும் பேச வேண்டாம் எனக் கூற விவாதம் முடிவுக்கு வந்தது

Related Articles

Back to top button
Close
Close