தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் சேவைத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க மண்டல வாரியாக குறுகிய கால ஒப்பந்தம் மூலம் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் சாலை வெட்டுக்கள் முடிக்கப்பட உள்ள இடங்களில் சீரமைக்கப்படவுள்ள 140 சாலைகளிலும் மற்றும் சாலை வெட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 277 சாலைகளிலும் அக்டோபர் 10-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்; இதுதவிர வேறு எந்த சாலை வெட்டுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில், சேவைத் துறையினரால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதை சிறந்த முறையில் சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மண்டலம்-2 நெடுஞ்செழியன் சாலையில் வாரியத்தின் மீதமுள்ள 100 மீட்டர் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; அனைத்து பஸ் தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை முடியும் காலம் வரை புதிய சாலை வெட்டுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்; சாலை சீர் அமைக்கும் பணிக்கு கொண்டுவரும் வாகனங்களுக்கு பகல் நேரங்களில் போக்குவரத்து துறையில் அனுமதி அளிக்க வேண்டும்; எருக்கஞ்சேரி சாலையில் மூலக்கடை சந்திப்பு முதல் மாதவரம் ரவுண்டானா வரை மேற்கொள்ளப்படும் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். மேலும், முகலிவாக்கம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அவை முடிக்கப்பட்ட இடங்களில் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; ஆற்காடு சாலை, ஓஎம்ஆர் சாலை சீரமைக்கும் பணிகள், கொட்டிவாக்கம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர், 100 அடி உள்வட்ட சாலையில் மேற்கொண்ட சாலைவெட்டு பணிகள் முடிவடைந்ததாகவும், சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Read Next
7 hours ago
சவுக்கு சங்கரின் மேல், மேலும் ஒரு வழக்கு பதிவு..,
7 hours ago
கேஜ்ரிவால் –“சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்”..
7 hours ago
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது
7 hours ago
காங்கிரஸ்–அரியானா மைனாரிட்டி பாஜ அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
16 hours ago
சென்னை புறநகர் மணலி பெட்டிக் கடைகளில் 13 கிலோ குட்கா பறிமுதல்…
16 hours ago
கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்…
17 hours ago
நீடாமங்கலம்–கோவில் நந்தவனத்தில் தூய்மை பணி…சிறப்பு செய்தி..
1 day ago
சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி…?
1 day ago
அபிஷேக் பானர்ஜி– பாஜகவின் “பொய் பிரச்சாரத்தை நிராகரிப்பீர்!”..
1 day ago
தேனி-பத்திரிகையாளர் மீது கொலைவெறி தாக்குதல்…,வன்மையாகக் கண்டிக்கிறோம்.
Related Articles
மோடியின் செயல்கள் குறித்து ஓர் உரை….
2 days ago
தேனியில் நடப்பது என்ன ….?
2 days ago
விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..
3 days ago
தேவசெய்தி 8 / 5 / 24
3 days ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
3 days ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
3 days ago