fbpx
Others

தமிழ்நாடு சிலம்பம் பேரவை—சிறப்பு செய்தி.

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் கடந்த 11ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தேசிய போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி சுற்று போட்டி குரோம்பேட்டையில் நடத்தப்பட்டது அந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் விரைவில் பாண்டிச்சேரியில் நடக்கின்ற தேசிய போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவார்கள் போட்டியை சிறந்த முறையில் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்களுக்கு குரோம்பேட்டை சமுதாய கூடத்தில் பாராட்டு விழாவும் நினைவு பரிசும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர் தலைமுது மணி ஆர் முருகக்கனி ஆசான் தலைமை தாங்கினார் தமிழ்நாடு சிலம்பம் பேரவை பொதுச் செயலாளர் நாஞ்சில் மு சுரேஷ் மற்றும் மூத்த ஆசான் எஸ் ரிஸ்வான் பாஷா முன்னிலை வகித்தனர். அனைவரையும் பேரவை நிறுவனத் தலைவர். அண்ணாவி. ஜெ. ஈசன் வரவேற்றார்.போட்டியில் நடந்த நிறை குறைகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.நிகழ்ச்சியில். ஜெ.ஜெ. பாஸ்கர் ஆசான்.நந்தகுமார் ஆசான். ராஜேந்திரன் ஆசான். சரவணன் ஆசான்.கஜேந் திரன்ஆசான்.ஐயப்பன்ஆசான். விமல்ராஜ்பாண்டியன் ஆசான். மற்றும் நடுவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் துணை பொது செயலாளர். சண்முகப்பிரியா ஆசான் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close