fbpx
Others

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பம் கொடி…..

 

அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர்முருகக்கனி ஆசான் கொடி ஏற்றினார்…

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை என்ற ஊரில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் பேரவை தலைவர்.நந்தகுமார்தலைமையில் சிலம்பபெயர்பலகைதிறப்புவிழாவும்.சிலம்பக்கொடிஏற்றுவிழாவும்நடைபெற்றதுமாநில துணைத்தலைவர். கஜேந்திரன் .மாநில பொருளாளர் .ஜே. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார் .அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் சிலம்ப கொடியை ஏற்றினார். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் ஜே . ஈசன் பெயர் பலகை திறந்து வைத்தார்.விரைவில் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியும் அதற்கு அடுத்து தேசிய போட்டியில் மே மாதம் சர்வதேச போட்டியும் நடத்த உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாக மாநில தலைவர் ஈசன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் சி.பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூடம் துணை தலைவர். முகமது அப்துல் காதர் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.மாணவர்களின் சிலம்ப நிகழ்ச்சி தீப்பந்த நிகழ்ச்சி போன்றவை மெய்சிலிர்க்க வைத்தது பெற்றோர்கள் கைதட்டி.பாராட்டி மகிழ்ந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close