தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க- சிறப்பு செய்தி.
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருவள்ளூர் மாவட்ட கால்நடை ஆய்வாளர் சங்கத்தின்மாவட்டசெயலாளர்திரு.R.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களுக்கு தங்களின் நியாயமான 5 அம்ச கோரிக்கை மனுவினை அளிக்கும் நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.R.பிரபாகரன், மாவட்ட இணைச் செயலாளர் திரு. தனசிங், அம்பத்தூர் கோட்ட செயலாளர் திரு.ராஜா, திருவள்ளூர் கோட்ட செயலாளர் திருமதி. ரமணிபாய், பொன்னேரி கோட்ட செயலாளர் திருமதி. பிரபாவதி, திருத்தணி கோட்ட செயலாளர் திரு. நரேஷ்குமார், மாநில செயலாளர் திருமதி.S.ஆனந்தி, முன்னாள் மாநில துணைத் தலைவர் திரு.சரவணன், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் திரு.அருளானந்தம், திரு.ரமேஷ், மூத்த கால்நடை ஆய்வாளர் திரு.ரமேஷ் உட்பட திருவள்ளூர் மாவட்ட கால்நடை ஆய்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் திருமதி.க.திவ்யா, மாவட்ட துணைத்தலைவர் திரு.சந்திரமோகன், மாவட்ட இணைச் செயலாளர் திரு.மேகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.