தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது…
இன்று (ஆகஸ்ட் 05) காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை முதல்வர் விஜய் படைத்துள்ளார்; தவெகவின் வெற்றி ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல, தமிழக மக்களின் வெற்றி. பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து ஜனநாயகனாக இந்த சபையில் நமது முதல்வர் அமர்ந்துள்ளார். ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் ஏரளாமான சாதனை செய்துள்ளார். நெஞ்சில் குடியிருக்கு தமிழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.வளர்சியே அரசின் லட்சியம்; 2036க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதே இலக்கு. கடன் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம். உண்மையான சமூக நீதியைகொள்கையாகதவெகஅரசுகொண்டது.டெண்டர்களில்வெளிப்படைத்தன்மையைதவெகஅரசுகொண்டுவந்துள்ளது.மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது. இவ்வாறு மரியவில்சன் பேசினார்.வேளாண் துறைக்கான, தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி உள்ளார். முதல்வர் விஜய் ஒப்புதல் பெற்று, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது.