fbpx
Others

தமிழக தலைவர்கள் தங்களது கருத்து– பிரபாகரன்உயிருடன் இருப்பது பற்றி

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார். இதை இலங்கை ராணுவம் மறுத்துள்ள நிலையில், தமிழக தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர், 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழ இறுதி போரில் கடும் சண்டையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவர் இறந்து கிடப்பது போன்ற படமும் வெளியானது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் இருப்பினும் பிரபாகரன் சாகவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்று தமிழ் தேசிய தலைவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தனர். 14 ஆண்டுகளுக்குபிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் திடீர் தகவல்: தமிழக தலைவர்கள் சொல்வது என்ன? பிறகுபிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று பரபரப்பான தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று ‘விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மை அறிவிப்புகள்’ என கூறி அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழ் ஈழ தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம் இதுவரை அவரை பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். விரைவில் அறிவிப்பார் தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார். தமிழ் ஈழ மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. நடவடிக்கை வேண்டும் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்த காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு உள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.  இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மகிழ்ச்சியான நற்செய்தி போரில் தமிழ் ஈழ தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கை ராணுவம் பரப்பி வந்தது. ஆனால் அது உண்மையல்ல. இன்று நான் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான நற்செய்தியை கூறிக்கொள்வதில் கடமைப்பட்டு உள்ளேன். நம்முடைய தலைவர் பிரபாகரன் சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் தொடர்பில் உள்ளேன். அவர்களது அனுமதியுடன்தான் இந்த நல்ல செய்தியை தெரிவிக்கிறேன். இதன் மூலம் பிரபாகரன் மரணம் அடைந்தார் என்று திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.  உரிய நேரத்தில் வெளிப்படுவார் பிரபாகரன் தற்போது எங்கு உள்ளார் என்பதை அறிய ஈழ தமிழர்கள், உலக தமிழர்கள் போல் நானும் ஆவலாகத்தான் உள்ளேன். உரிய நேரத்தில் அவர் வெளிப்படுவார். அப்போது அவருக்கு அனைத்து தமிழர்களும், தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் திரண்டு ஆதரவு கொடுத்து துணை நிற்க வேண்டும். அவரது தலைமையில் வலிமையான தமிழ் ஈழம் அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை. தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க உள்ளார். கால் ஊன்றவில்லை தற்போது இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை பொதுமக்கள் தூக்கி எறிந்து உண்மை நிலையை தெரிந்து கொண்டுள்ளனர். அங்கு சாதகமான சூழல் நிலவுவதால்தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவித்தேன். மேலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ பொய். யூகங்களுக்கு என்னால் பதில் கூற முடியாது. விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் கால் ஊன்ற அனுமதிக்கவில்லை. சீனாவால் ஆபத்து இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்த காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி உள்ளது. இது இலங்கை நாட்டுக்கு பேராபத்து. அண்டை நாடான நமது நாட்டுக்கும் சீனாவால் ஆபத்து ஏற்படுவதை தடுக்க பிரதமர் மோடி உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் துரித நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கவிஞர் காசி ஆனந்தன், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் முருகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர். தலைவர்கள் கருத்து விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த தகவல் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியா முழுவதும் குறிப்பாக இலங்கைக்கும் கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:- வைகோ ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் ஈழ தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலை போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி சென்னையில் பேட்டி  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அண்ணனை (பழ.நெடுமாறன்) காட்ட சொல்லுங்கள் நானும் பார்த்து வருகிறேன். இதில் எனக்கு ஒன்றும் மாற்றுக்கருத்து இல்லை’ என்று தெரிவித்தார். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்தபோதே, அவர் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் சொன்னார். அதை 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் சொல்லி இருக்கிறார். ஆனால் புதிதாக எந்த ஆதாரத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. பிரபாகரன் உயிரோடு இருந்தால் அவரே வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. அண்ணன் இருந்தால் வருவார். வந்தால் மகிழ்வோம். இவ்வாறு அவர் கூறினார்.  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கிறார். அவரை பொறுத்தவரை எந்த கருத்தையும் ஆதாரமில்லாமல் சொல்ல மாட்டார். மூத்த அரசியல் தலைவர். அவர் கூறுவதுபோல் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். சீமான் கருத்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:– என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை பலி கொடுத்து விட்டு என் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிப்போய் இருப்பார் என்று நினைக்கிறீர்களா?. சொல்லுங்க. எந்த சூழ்நிலையிலும் நான் இந்த மண்ணைவிட்டு செல்ல மாட்டேன் என்று வீரமாக நின்று சண்டை செய்தவர் என் அண்ணன். அவர் தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகிற கோழை என்று நீங்கள் என் அண்ணனை நினைக்கிறீர்களா?. போர் முடிந்து பேரழிவினை நாங்கள் சந்தித்த பிறகு, பத்திரமாக ஒரு இடத்தில் பதுங்கி இருப்பார். எதுவும் பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. வந்து விட்டு சொல்வார் சொல்லிட்டு வருகிறவர் இல்லை எங்கள் அண்ணன். வந்து விட்டு சொல்வார். அதுதான் அவருக்கு பழக்கம். அவரை அறிந்தவர் நன்கு அறிவார்கள். ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று அவர்கள் சொல்கிறார்கள். தோன்றும்போது பேசுவோம். பெரியாரிடம், கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, கடவுள் நேரில் வந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டார்கள். வந்தால் கடவுள் இருக்கிறார் என்று சொல்வேன் என்றார். பழ.நெடுமாறன் கூறுவதுபோல எங்கள் தலைவர் ஒருநாள் வந்து விட்டால், வந்ததில் இருந்து பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார். இலங்கை ராணுவம் மறுப்பு பிரபாகரன் விவகாரம் தொடர்பாக இலங்கையை நோக்கி, குறிப்பாக அந்த நாட்டு ராணுவத்திடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த தகவலை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் நளின் ஹேரத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்ததாவது:- விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரது மரபணு பரிசோதனை ஆதாரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. சந்தேகம் இல்லை எனவே அவர் உயிருடன் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. இந்த தகவல் எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். அதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹேரத் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close