ஹாஸ்டலை கொடுங்க… முடியாது…! அண்ணா பல்கலை.யுடன் மல்லுகட்டும் சென்னை மாநகராட்சி!
Anna university decision about corona center
சென்னை:
கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த மாணவர் விடுதியை தரமுடியாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மட்டுமின்றி தனியார் கல்லூரிகள், திருமண மண்டபங்கள் உள்பட பல இடங்களில் கொரோனா முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்குமாறு சில நாட்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி கேட்டிருந்தது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியது. பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு மறுத்து, மாணவர்கள் பொருட்கள் விடுதிக்குள் உள்ளதால் காலி செய்ய முடியாது என்று கூறியது.
இந் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தரமுடியாது என்று திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் வேறு கட்டிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.