தொழிற்துறையில் கோலோச்சினாலும், மெய்யியல் மீது கொண்ட அளவற்ற ஈடுபாடு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருத்தொண்டு பலபுரிந்தும், ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தும், கல்வித்தந்தையாக எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியும், மதுரை மக்களின் பேரன்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய மாண்பாளராகத்திகழ்ந்தவர். அன்னைத்தமிழின் மீது பெருங்காதலும், தமிழ்த்தேசியக் கருத்தியலில் மிகுந்த உறுதிப்பாடும் கொண்டிருந்த ஐயா கருமுத்து கண்ணன் அவர்களது மறைவு மதுரை மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ப்பேரினத்திற்குமான பேரிழப்பாகும். ஐயா கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். பெருந்தமிழர் ஐயா கருமுத்து கண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Others