தகவல்மலர்கள்🇮🇳Sairam Ajit கோயம்புத்தூர்
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர்: அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், வாட்ஸ்அப் மூலமும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வழக்கறிஞர் பாலமுருகன் கூறியுள்ளார்..
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர்: 🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
✍️ முக்கிய செய்திகள்
1 சென்னை: மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கல்லூரி கனவு நிகழ்ச்சியில் முதல்வர், மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறைகளிலும் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகவே தான் நான் முதல்வன் திட்டம். உயர்கல்வி, வேலைவாய்ப்புடன் கைநிறைய ஊதியம் பெறுவது மட்டுமல்ல; மாநிலத்தை உயர்த்த உங்களது ஆற்றல் பயன்பட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
2 சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மூலம் ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர தொடர் நடவடிக்கையால் வாடகை மற்றும் குழந்தை நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது
3 சென்னை: தமிழகத்தில் 444 உதவி காவல் ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழகத்தில் 197 மையங்களில் 43 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 2,21,213 பேர் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் 10 இடங்களில் நடக்கும் தேர்வை 506 பெண்கள் உள்பட 8,586 பேர் எழுத உள்ளனர்.
4 சென்னை: சென்னை கே.கே.நகரில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது இயற்கையானது என்று மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். மழைநீர் வடிகால் பணிகளுக்கும், விபத்துக்கும் தொடர்பில்லை என மாநகராட்சி கூறியுள்ளது. மரங்கள் முறிந்து விழுவதை தடுக்க பழமையான மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
5 சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,755க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.65.70க்கு விற்கப்படுகிறது.
6 சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார். பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
7 ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன்நகர் பகுதியில் 2வது நாளாக சிறுத்தை தாக்கியதில் மேலும் ஒரு மாடு பலியாகியது. சத்தியமங்கலம் ராஜன்நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
8 டெல்லி: பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல; பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என மாயாவதி தெரிவித்துள்ளார்.
9 டெல்லி: பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல; பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என மாயாவதி தெரிவித்துள்ளார்.
1 சென்னை: ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
: 🆚நேரலை செய்திகள்
🆚தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 200 மாணவ , மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
🆚மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர்: 🌎சென்னை: யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். ஓ.பி.எஸ்.-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.✳️✳️
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர்: 🆚நேரலை செய்திகள்
🆚எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம்
🆚ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
🆚ஒற்றைத் தலைமைக்கு இபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் – ஜெயக்குமார்
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர்: புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் இருந்து ரசாயன திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாழைப்பழங்களுக்கு ரசாயனம் பூசப்பட்ட காணொலி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்..
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர்: 🌎💢♨️சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சின்னக் கல்லாறு 7 செ.மீ., சின்கோனா, கீழாநிலையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. பூண்டி, புழல் தலா 4 செ.மீ., சோலையாறு, பெரியாறில் தலா 3 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.✳️✳️
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர்: சென்னை: இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் பிறந்த நாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; கல்வி – வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த சமூகநீதிக் காவலர் திரு.வி.பி. சிங் அவர்களின் பிறந்த நாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்✳️✳️
[10:05 AM, 6/26/2022] Sairam Ajit கோயம்புத்தூர் சென்னை பகுதியில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சாவை போலீஸ் தீ வைத்து அழித்தது. சிங்கபெருமாள்கோவில் தென்மேல்பாக்கத்தில் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரியூட்டு ஆலையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. 2018 முதல் 2020 வரை சென்னை காவல்துறையினர் பறிமுதல்.