சென்னை மெரினாக் கடற்கரையில், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, அதில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் கலந்துகொண்டு, ஜெயலலிதாவின்ஆளுமையைப் பற்றி புகழ்ந்து பேசியதை உலகம் கேட்டது.தமிழகத்தில் அப்போது பாரதிய ஜனதா கட்சிக்கான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா மட்டுமே. அதற்காக கடுமையான பிரச்சாரங்களை மேற்கோண்டதோடு, அவர்கள் அமைத்த அந்தக் கூட்டணி மக்கள் ஆதரவோடு பெரும் வெற்றியைப் பெற்றுக் காட்டியது. இந்த வரலாறை அண்ணாமலை தெரிந்திருப்பாரா?மக்களுக்கு நல்லது செய்வதையே தன் அடிப்படை குணமாகக் கொண்டவர் ஜெயலலிதா. அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகள் பலவற்றை திமுக தொடுத்தது. எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் அவரிடம் வழங்கப்பட்டது.இந்தக் காலக்கட்டத்திலும் இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில்அடைந்திருக்கக்கூடிய பெருமைமிகு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அம்மா அவர்களே என்பதை அண்ணாமலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.ஏழைகளைத்தேடிஅரசு,ஏழைகளுக்கானஅரசுஎன்பதைநிலைநாட்டியதோடு, தமிழகத்துக்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கியவர் ஜெயலலிதா.அதனால்தான், அவரது ஆட்சி முறையைப் பல்வேறு மாநில அரசுகள் இன்றும்பின்பற்றுகின்றன உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர். அதனால்தான் அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர். ஏன், இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி போயஸ் தோட்டத்தில் வந்து அம்மாவை சந்தித்து தனது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தினார்.உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. இவை எதையும் உணராமல், அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்துக்குரியது.தன் பெரும் அறிவைப் பயன்படுத்தி ஊழல் தொடர்பாக கருத்தைக்கூறும் அண்ணாமலை, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கும், அதில் ஊறித்திளைத்த அமைச்சர்களுக்கும் எதிராக மத்திய அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல முடியுமா?கடந்த இரண்டு ஆண்டுகாலமாக திமுக அரசின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் அண்ணாமலை, அதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல முடியுமா? வெறுமனே சோதனைகள் மட்டும் தீர்வாகாது. ஊழலை ஒழிக்கப் பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும்.முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.