fbpx
Others

ஜெகதீஷ் குமார் (யுஜிசி) — ஷ்கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும்.

 பல்கலைகளுக்கான பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்பட உள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை (சியூடிஇ) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும் என்று பல்கலை மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர் கூறியதாவது:
பல்கலைக் கழங்களுக்கான பொது நுழைவு தேர்வில் கடந்தாண்டு பல்வேறு தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டன. இந்த முறை மாணவர்கள் தொழில்நுட்ப பிரச்னைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. கியூட் தேர்வை ஜேஇஇ, நீட் தேர்வுகளுடன் சேர்த்து நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அப்படி நடத்தும் பட்சத்தில், அது பற்றி 2 ஆண்டுகளுக்கு முன் கூட்டியே மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close