fbpx
Others

ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும்..M.T.C

chennai_MTC_busசென்னையில் மாநகர பேருந்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு ஜிபிஎஸ் மூலம் பேருந்துகளில் நிலையைத் தெரிந்துகொள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதே நிறுத்தத்தை ஜிபிஎஸ் மூலம் அறிவிக்கும் வசதியைக் கொண்டுவர உள்ளனர். முதற்கட்டமாக தற்போது 500 பேருந்துகளில் 6 ஒலிபெருக்கி சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வயரிங் பணி நடைபெற்றுவருவதாக மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து மேலும் 1000 பேருந்துகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த சேவை 6000க்கு மேற்பட்ட நிறுத்தங்களுக்கு வருகிறது. பேருந்து நிறுத்தம் வருவதற்கு 250 இல் இருந்து 200 மீட்டர் முன்பே அந்த நிறுத்தத்திற்கான அறிவிப்பு வந்துவிடும். இதனால் பயணிகளுக்கு நிறுத்தத்தைப் பற்றிய கவலை இல்லாமல் எளிதாகப் பேருந்தில் பயணம் செய்ய உதவும்.

Related Articles

Back to top button
Close
Close