Others
சோழவரம்–ஆட்டந்தாங்கல்–புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஆட்டந்தாங்கல் பகுதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். அமிர்தவள்ளிடில்லி தலைமை தாங்கினார் .
ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேலு. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன். செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசன், சோழவரம் காவல் ஆய்வாளர். ஜெகநாதன். உதவி ஆய்வாளர். சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.