fbpx
Others

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை-அதிர்ச்சி சம்பவம்-உத்திரபிரதேசம்

மருத்துவமனையில் மின்தடை

மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்கு ஜெனரெட்டரை இயக்கி உடனடியாக மின் விநியோகத்தை வரவைக்காமல், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தின் மூலம் சிகிச்சை செய்த அவல நிலை ஏற்பட்டது. இதன் காணொலியும் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது  .பெண் ஒருவர் ஸ்ரெச்சரில் உள்ள நிலையில், அவரை சுற்றி பலரும் செல்போன் மூலம் வெளிச்சம் பரப்பி மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். மற்ற நோயாளிகளும் இருட்டில் அமர்ந்துள்ளனர். இது குறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஆர்டி ராம் கூறுகையில், “மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாமல் இல்லை. ஆனால், ஜெனரேட்டரில் பேட்டரிகளை கொண்டு வர சுமார் 20 நிமிடம் தாமதம் ஆகியுள்ளது. இங்கு அடிக்கடி பேட்டரிக்கள் தொலைந்து போவதால் அதை நாங்கள் தனியாக நீக்கி வைத்துள்ளோம்” என்றார். ஆனால் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் தவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Related Articles

Back to top button
Close
Close