fbpx
Others

சென்னை— தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிமண்டல குழு கூட்டம்..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல குழு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எம்.நசிமுத்தீன், சென்னைதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது மற்றும் புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய வைப்பு நிதி கமிஷனர் பங்கஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.மண்டல குழு கூட்டத்தில், தமிழகத்தில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் செயல் திறன், குறிப்பாக தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் தொடர்புடையவர்களின் குறைகள், வருங்கால வைப்பு நிதியின் வரம்புக்குள் அதிகப்படியானவர்களை கொண்டு வருதல், உறுப்பினர்களாக சேருவதற்கு தடையாக உள்ளவற்றை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பல்வேறு திட்டங்களின் கீழ், நேரடியாக தெரிவிக்கப்படும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக மண்டல வைப்பு நிதி கமிஷனர்-2 நிலையில், குறை தீர்க்கும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக பங்கஜ் தெரிவித்தார். மேற்கண்ட தகவல் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல வைப்பு நிதி கமிஷனர்-1 பி.ஆண்ட்ரூ பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close