fbpx
Others

சென்னை சோழவரம் —என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செங்குன்றம் அருகே இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

செங்குன்றம் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சியில் நடை பயிற்சியில்ஈடுபட்டிருந்த முன்னாள்ஊராட்சிமன்றதலைவர்பார்த்திபன் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த செங்குன்றம் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் 5 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்  கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முத்து சரவணன்(33) மற்றும் சதீஷ்(24) இருவரும் தலைமறைவாக இருந்தனர் .
போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சோழவரம் அருகே மாரம்பேடு பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் மறைந்திருப்பதாகபோலீசாருக்கு தகவல் வந்தததையடுத்து உதவி ஆணையர் ஜவகர் தலைமையில் போலீசார் சுற்றி வளைத்தனர்.மறைந்திருந்த ரவுடிகள் தங்கள் கையில் இருந்த துப்பாக்கி மூலம் சுட்டனர்.இதில் கிருஷ்ணமூர்த்தி. லிவி. பிரபு ஆகிய மூன்று காவலர்கள் காயம் அடைந்தனர்.இதனையடுத்து போலீசார் சுட்டதில் முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான். சதீஷ் என்கிற சண்டே சதீஷ் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தான். என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் பல்வேறு கொலைவழக்குகளில்சம்பந்தப்பட்டவர்கள்என்பதுகுறிப்பிடத்தக்கது.என்கவுண்டர் நடந்த இடத்திற்கு ஆவடி காவல் மாவட்ட ஆணையர் சங்கர் நேரில் சென்று விசாரணை செய்தார்.ரவுடிகளால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த மூன்று போலீசாரை டிஜிபி .சங்கர் ஜிவால் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்..

 

Related Articles

Back to top button
Close
Close