செங்குன்றம்-வடநாட்டு பெண் வெட்டுக்கத்திகள்விற்பனை
செங்குன்றம் பஸ் நிலையம் எதிரில் வடநாட்டு பெண் ஒருவர் ஏராளமான வெட்டுக்கத்திகளை விற்பனை செய்து வந்தார்.இது குறித்து பொதுமக்கள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.இதனை அடுத்து போலீசார் எச்சரிக்கை செய்ததால் அந்த வடநாட்டு பெண்மணி வெட்டுக்கத்திகளை மூட்டை கட்டிக்கொண்டு எடுத்து சென்று விட்டார் .
அடிக்கடி சண்டை வருகின்ற பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள்.. பயணிகள். வணிகர்கள். அலுவலகம் செல்பவர்கள். ஆயிரக்கணக்கில் நடமாடுகின்ற இடத்தில் வெட்டுக்கத்தி விற்பனை செய்வது சமூக விரோத செயல்களுக்கும். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் செயல்களுக்கும் காரணமாகிவிடும் என்ற காரணத்தால் இதுபோன்று சாலையில் வெட்டு கத்திகள் விற்பனை செய்யும் யாராக இருந்தாலும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புற படுத்த வேண்டும் என்று செங்குன்றம் வியாபாரிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
.