fbpx
Others

செங்குன்றம் பஜார் சாலையில் மழைநீர் கால்வாய்அமைக்கபடும்— தகவல்

செங்குன்றம் பஜார் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க ரூபாய் 17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது!கவுன்சிலர்கள் கூட்டத்தில் தகவல்!! செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் தமிழரசி குமார் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர்ஆர். விப்ர நாராயணன் செயல் அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ள ஜி. என். டி. சாலை ஆரம்பத்தில் இருந்து புழல் உபரி நீர் செல்லும் கால்வாய் வரை இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதோடு பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதையும் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூபாய் 17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .என்ற தகவலை கவுன்சிலர் கூட்டத்தில் செயல் அலுவலர் பாஸ்கர் தெரிவித்தார்.மழை நீர் கால்வாய் அமைப்பதற்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது.சாலையின் இரு புறம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை விரைவில் உரியநடவடிக்கையை எடுக்க உள்ளது வியாபாரிகள். பொதுமக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close