fbpx
Others

செங்குன்றம்–குட்கா மற்றும் போதை பொருள் விற்பனை செய்த மூன்று பேர் கைது..

ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் செங்குன்றம் மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடப்பதாக செங்குன்றம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சாய் கணேஷ் க்கு தகவல் கிடைத்தது இதனைஅடுத்து தனிப்படை மூலமாக செங்குன்றம் மார்க்கெட் பகுதியில் டீக்கடைகள் பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.
இதில் ராஜன்( 49) டீக்கடையில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.தெரியவந்தது. அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ போதை பொருள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவர் கொடுத்த தகவலின் பெயரில் அலமாதியில் உள்ள தனியார் குடோனில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்து 75 கிலோ எடையிலான குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர் குடோனில் பதுக்கி வைத்து சப்ளை செய்த செங்குன்றம் பிரதாப் சிங்( 34) ஜெயபாலன்( 41) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போதை பொருட்களை விற்பனை செய்த ராஜன். பிரதாப் சிங். ஜெயபாலன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 150 கிலோ குட்கா மற்றும் போதை பொருட்களும் அவர்கள் பயன்படுத்திய ஒரு காரும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close