fbpx
Others

செங்குன்றம் — கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி…

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் செங்குன்றம் சுற்று வட்டார 10 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நெல் அரிசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .சங்கத் தலைவர்டி. கோபி தலைமை தாங்கினார். செயலாளர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்க சம்மேளனத்தின் தலைவர்.துளசிங்கம் செயலாளர்சி. மோகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கியதோடு பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தந்த கதிர்வேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நினைவு பரிசும் ரூபாய் பத்தாயிரம் ரொக்க பரிசும் வழங்கி பாராட்டினார்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சி .எம். அபினேஷ் குமாருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் துணைத் தலைவர். சாய் ஜெயபால். இணை செயலாளர் நாகேந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
முடிவில் சங்கத்தின் பொருளாளர் கே. என். குணசேகரன் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close