fbpx
Others

செங்குன்றம்-ஓ. ஆர். ஜி. என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுதந்திர தினவிழா.

சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம்ஓ .ஆர் .ஜி .என் ஆண்கள்அரசு மேல்நிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் விழாவிற்கு தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றினார் .உதவி தலைமை ஆசிரியர் புஷ்பலதா அனைவரையும் வரவேற்றார்.விழாவில் மாணவர்களின் பேச்சுப்போட்டி. கட்டுரை போட்டி. பாட்டு போட்டி. நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் சுப்பிரமணியன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.சிலம்ப பயிற்சியாளர் எம் . ராஜா தலைமையில் மாணவர்கள் சிலம்ப விளையாட்டு திறமைகளை செய்து காட்டியதை அனைவரும் கைதட்டி பாராட்டினர் .இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பேனா வழங்கப்பட்டது.
விழா முடிவில் உதவி தலைமை ஆசிரியர். அய்யனார் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close