fbpx
Others

செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா..!

செங்குன்றம் கே. பி .சி .அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவிற்கு தலைமை தாங்கி தேசிய கொடியை பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம் குமாரி ஏற்றி வைத்தார். சிலம்பம். பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் பேச்சுப்போட்டி. கட்டுரை போட்டி போன்ற போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ஆசிரியர்கள் முத்துச்செல்வி. கலாவதி. கஜலட்சுமி மற்றும் பிரிஸில்லா மனோகரி.
ராணி பாய் ஆகியோர் சுதந்திர தின வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்து பேசினார்கள்.
விழாவில் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் துணைத் தலைவர் விப்ர நாராயணன் வார்டு கவுன்சிலர்கள் கோதண்டன் இளங்கோவன் மற்றும்முன்னாள் பேரூராட்சி தலைவர். ராஜேந்திரன் சிற்றம்பலம். சாந்தகுமார். சேரன். வழக்கறிஞர் சுதாகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர். ஜெய பாக்கியம். துணைத்தலைவர். சாந்தி மற்றும் உறுப்பினர்கள். பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள். பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி யை ஆசிரியர் திலகா தொகுத்து வழங்கினார்.விழா முடிவில் ஆசிரியர் அமுதவல்லி நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close