செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஆவடி போலீஸ் கமிஷனர் கே. சங்கர் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கினார்!!
செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இரு சக்கர வாகன போட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் செங்குன்றம் பைபாஸ் வடகரை சிக்னல் அருகே நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு செங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆர். மலைச்சாமி தலைமை தாங்கினார். ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையர்ஏ. ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர்டி. சோபிதாஸ் அனைவரையும் வரவேற்றார். ஆவடி மாநகர காவல் ஆணையர். கே. சங்கர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகுறித்துசிறப்புரையாற்றி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் வழங்கினார்.நிகழ்ச்சியில் நாரவாரி குப்பம் பேரூராட்சி தலைவர். தமிழரசி குமார். நெல் அரிசி சங்க நிர்வாகி. ஜி. கோதண்டன் ஹோட்டல்கள் சங்க நிர்வாகி எஸ். கோபி மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள். விவேகானந்தன். சரவணன். லோகநாதன். உமாபதி மற்றும் ஏராளமான இருசக்கரவாகனஓட்டிகள்.பொதுமக்கள்கலந்துகொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையர். ரூபன் நன்றி கூறினார்..