சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! சென்னையில் 15ந்தேதி நடக்கின்றது!! சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வருகின்ற 15-ம் தேதி சனிக்கிழமை காலை 9மணிக்கு உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிறது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என். ஆர். தனபாலன் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர்கள் பவர். பாண்டியன் .சோழா. ஞானம். இணை செயலாளர் ராஜாதுணை செயலாளர்கள் விஜயன்அருண் கேசவன் பொருளாளர்.ராஜவேலு மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிலம்ப ஆசான்கள். சிலம்ப ஆசிரியர்கள் .சிலம்ப பயிற்சியாளர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிலம்ப வளர்ச்சிக்கு அரசு எடுக்கின்ற முயற்சிகள் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.. ஆகவே அனைத்து சிலம்ப சொந்தங்களும் தவறாமல் வருகின்ற 15ஆம் தேதி காலை 9 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .என்று சங்கத்தின் செயலாளர் ஆர் முருககனி ஆசான் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.