சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க செய்தி
மாநில அளவிலான சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க பொதுக்குழு!
ஆகஸ்ட் மாதம் 21ந்தேதி சென்னையில் நடக்கின்றது!!
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அசோக் நகர் என். ஆர்.. டி. டவர் தரைத்தளத்தில் நடந்தது கூட்டத்திற்கு சங்க தலைவர் என். ஆர். தனபாலன் தலைமை தாங்கினார் .சங்க துணைத் தலைவர் பவர் பாண்டியன் ஆசான் இணை செயலாளர் எம். ராஜா ஆசான் முன்னிலை வகித்தனர் .சங்க செயலாளர்
ஆர். முருகக்கனி ஆசான் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் அனைத்து சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் மூலமாக வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை வடபழனி கமலா தியேட்டர் அருகில் உள்ள சினிமா இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் சிலம்ப வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டவும் அரசாங்கம் மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானமாக அரசுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆசான்கள். ஆசிரியர்களை வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சிலம்ப வளர்ச்சி மூலமாக மாணவ மாணவிகள் அரசு சலுகைகள் பெறக்கூடிய அளவில் சிறந்த முயற்சியை இச்சங்கம் வாயிலாக எடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கிருஷ்ணசாமி ஆசான் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் விஜயன். சண்முகம். பாலசேகர். முரளிமாஸ்டர்.சீனிவாசன். சண்டை இயக்குனர் கோபால் மாஸ்டர் நாராயணன் மாஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ராஜவேலு நன்றி கூறினார்