Others
சிறைத் துறை–சிறை வளாகங்களைகண்காணிக்கட்ரோன் கேமரா
இதற்கான ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு, சிறைத்துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு அதன் மூலம் கண்காணிப்பதன் மூலம் சிறை வளாகத்தில் நடக்கும் அனைத்தையும் துல்லியமாக காண முடியும்.இதன் மூலம் அத்துமீறல்கள் முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் சில நேரங்களில்கைதிகள் சட்ட விரோத செயல்களில்ஈடுபட்டால் அவற்றை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிப்பதன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் அவர்கள் அதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.எனவே, விரைவில் ட்ரோன் கேமரா வாங்கப்பட்டு சிறை வளாகத்தில் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்