fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், புத்தகப்பைகள்..! தமிழக அரசு வினியோகம்!

Tn school children’s free books, bags issue

சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வீட்டில் இருந்தபடியே ஆன்-லைன் வகுப்புகள் மூலம் படிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந் நிலையில், 2 முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாணவர்கள் உரிய தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதிசெய்யும் விதத்தில், ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்கள் என்ற வீதத்தில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் புத்தக விநியோகத்துக்கு கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close