Others
சரக்கு முனையம் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்.
தேனியில் உள்ள இரயில்வே நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையம் 22/10/2023 இன்று காலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.. இந்த சரக்கு முனையத்தில் நேற்று சரக்கு இரயிலில் வந்த அரிசி மூட்டைகளை தேனி, போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு சேமிப்பு கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லும் நிகழ்ச்சி….. இவற்றால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….. ஏனெனில் இந்த பகுதியில் சரக்கு வாகனங்கள் வந்து செல்வதால் மக்களுக்கு வேலைவாய்ப்பு, அருகில் உள்ள சிறிய வியாபார நிறுவனங்களுக்கு வியாபார வாய்ப்புகளும் நடைபெற அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன…………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.