RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
என்ன பண்ண போறீங்க..! பிரதமரே…! நாடே பாத்துக்கிட்டு இருக்குது..!
Kamalhaasan tweets about modi rs.20 lakh crore schemes 13052020
சென்னை: பிரதமரின் ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் பலனளிக்குமா என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
தொலைக்காட்சி வழியே உரையாற்றிய பிரதமர் மோடி ரூ20 லட்சம் கோடிக்கான பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம்.
அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று கூறி உள்ளார்.