சசிகலா-சட்டசபை, மக்கள் பிரச்சினைகளை பேசும் இடம்.
வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் சசிகலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனைவருக்கும் உரிமை உண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சட்டசபையில் பேசுவதற்கு உரிமை உள்ளது. சட்டசபை, மக்கள் பிரச்சினைகளை பேசும் இடம். சட்டசபையில், மக்கள் பிரச்னைகளை மக்கள் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அ.தி.மு.க. யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அதனை அ.தி.மு.க. தொண்டர்களிடம் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்திப்பு சட்டசபையில் அ.தி.மு.க. சார்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேளாங்கண்ணியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.