Others
கோவை—மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிமுகாம்..?
பயிற்சி நடத்தப்பட்டபோது எடுத்த புகைப்படம்
கோயம்புத்தூரில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பதாக புகைபடம், வீடியோ காட்சிகள் இன்று காலை சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் ஆய்வாளர் தலைமையில் போலீசார் தற்போது அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் , கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என தகவல் அளித்துள்ளார்.