Others
கோவை—ஜூன் 30-ல் மாநகராட்சி கவுன்சில் கூட்டம்.
கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் வரும் 30ம் தேதி (வெள்ளி) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடக்கிறது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார். இக்கூட்டத்தில், மாநகரில் 100 வார்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்தார்.