கோவை–காரமடை ஒன்றியம்–சிறப்பு செய்தி..
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி சென்னிவீரம் பாளையம் பகுதியில் போதுமான குடிநீர் இருப்பதால் எங்கள் ஊர் மக்களுக்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் கண்ணார பாளையம் மயானம் அருகே புதிய போர்வெல் அமைத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னி வீரம்பாளையம் பகுதிக்கு கொண்டுவரப்படுகின்றது எனதகவல்கிடைத்தது மயானம்அருகேகொண்டுவரப்படும்தண்ணீர்மிகவும்மாசற்றநிலையில்உள்ளதா ல் மயானம்அருகேபொதுமக்கள்பயன்படுத்தக்கூடிய கழிப்பிடமும், மயானத்தில் பிணத்தை புதைக்க குழி எடுத்தால் இரண்டு மூன்று அடி ஆழத்தில் தண்ணீர் ஊற்று இருப்பதால் அந்தத் தண்ணீரும், போர்வெல் தண்ணீரில் கலப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது இந்த தண்ணீரை குடித்தாலோ, குடித்தாலோ பல்வேறு நோய்களுக்கு ஆட்பட நேரிடலாம். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தியிடம் தொலைபேசியில் அழைத்து விவரத்தை கூறினோம் அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி இன்று 11.12.2023 நீர் ஆய்வு பொறியாளர், சென்னிவீரம் பாளையம் ஊர் பொதுமக்கள் மாதையன், தரணி ,தீபக், கந்தசாமி, ஸ்ரீதர், முருகேசன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தபோது எடுத்த படம்……