கோவையில்—திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மாணவ மாணவிகள்
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பில் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடை பிரிவில் தனித்திறமை. ஆயுதம். நேரடி போட்டி என நடந்த இந்த போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டம் 112 தங்கம் 90 வெள்ளி 110 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது . இது மட்டுமல்ல மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பெற்றது. மாநில தலைவர் பாலமுருகன். செயலாளர் அர்ஜுன்.மற்றும் மாநில நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வெற்றி பெற்று சேம்பியன் பட்டத்தை வென்ற திருவள்ளூர் மாவட்ட மாணவிகளை
தேசிய துணை தலைவர் முருகக்கனி. தேசிய பொதுச் செயலாளர் தியாகு நாகராஜன். இணைச்செயலாளர் ராஜா .தொழில்நுட்ப இயக்குனர் துரை மற்றும் மாவட்ட தலைவர் ராஜா செயலாளர் ரஜினி பொருளாளர் பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் பாராட்டினர் .
வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தேசிய அளவில் உத்தரப்பிரதேசத்தில் நடக்கின்ற தேசிய போட்டியில் பங்கு பெறுவார்கள் என்று தேசிய பொதுச் செயலாளர். தியாகு நாகராஜன் தெரிவித்தார் .